[ad_1]
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் பாடல் ஒன்றுக்காக ஐந்து மொழி பாடகர்கள் ஒன்றிணைந்தனர். தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் விஜய் யேசுதாஸும், ஹிந்தியில் அமித் திரிவேதியும், தெலுங்கில் ஹேமச்சந்திராவும், கன்னடத்திலும் யசின் நசிரும் பாடியுள்ளனர். அதனை தொடர்ந்து அண்மையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றும் வெளியானது.
‘பாகுபலியை’ மிஞ்சும் வகையில் இந்தப்படத்தில் பல பிரம்மாண்டங்களை நிகழ்த்தியுள்ளார் ராஜமெளலி. இதனால் படத்தின் வெளியீட்டிற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் நாளை மறுதினம் ‘ஆர் ஆர் ஆர்’ படம் வெளியாகவுள்ள ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள சூர்யா தியேட்டர் ஒன்றில் ரசிகர்கள் தங்கள் இருக்கையை விட்டு திரைக்கு அருகில் செல்லாமல் இருக்க இரும்பு முள்வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
பிரபலங்களின் படங்கள் வெளியாகும் முதல் நாளில் ரசிகர்களை சமாளிப்பது தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானாவில் ‘ஆர் ஆர் ஆர்’ படம் வெளியாகவுள்ள திரையரங்கில் முள்வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பது தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.
மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!
[ad_2]
Source link